வடகிழக்கு மாநிலத்தில் வெறுப்பு அரசியல் நிராகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு!!

Read Time:2 Minute, 9 Second

வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிரகாரித்து பாஜவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதத்தோடு கூறினார். கர்நாடக மாநிலம் துமகூருவில் ராமகிருஷ்ண விவேகானந்தர் ஆசிரமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் பேசியதாவது: திரிபுராவில் இடதுசாரிகள் ஆட்சியை பாஜ அகற்றியுள்ளது. நாகலாந்தில் பாஜ கூட்டணியுடன் ஆட்சி அமைய உள்ளது. மேகாலயாவில் முடிவு ஏற்படாத நிலை உள்ளது. புதிய இந்தியா அமைவதற்கு அரசியலில் அல்லது சமூக பணிகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும்.

வடகிழக்கு மாநிலத்தில் இடதுசாரி, காங்கிரஸ் ஆட்சியும் இருந்தபோது இந்திய நீரோட்டத்தில் இருந்து இம்மாநில மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். அந்த வெறுப்பு அரசியலை நிராகரித்த மக்கள், பாஜவை தேர்வு செய்துள்ளனர். பாஜ அரசை பொறுத்த வரையில் நாட்டின் எந்த பகுதியாக இருந்தாலும், எந்த பிரிவை சார்ந்தவரும் பாதிக்காத வகையில் வளர்ச்சி பணிகள் செய்து வருகிறது. அதை கடந்த 4 ஆண்டு பணிகள் மூலம் நிரூபித்துள்ளோம்.

இந்த ஒன்றிணைந்த அலை கர்நாடக மாநில மக்களும் உணர்ந்துள்ளனர். வடகிழக்கு மாநில மக்கள் வழங்கிய மாற்றம் பெரிய மாற்றம். வடகிழக்கு மாநில வெற்றியை பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி பார்த்து இதர அரசியல் கட்சிகளை மட்டம்தட்ட நாங்கள் விரும்பவில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!
Next post கொலை சம்பவம் தொடர்பில் சகோதர்கள் இருவர் கைது!!