கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது
கஞ்சாவை மிக ரம்மியமாக புகைத்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்பு மாணவர்கள் ஐவரை பதுளையில் பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர் குறிப்பிட்ட பாடசாலையொன்றில் இருந்து பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக் விஜயரட்ணவிற்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மாணவர்கள் ஐவரை கைது செய்தனர் பாடசாலை வேளையில் இந்த மாணவர்கள் ஐவரும் கஞ்சா மற்றும் போதை வஸ்த்துக்கள் கொண்ட சிகரட்டுகளை புகைத்துக்கொண்டிருக்கும் போதே பொலிஸார் இவரை கைதுசெய்திருக்கின்றனர் குறிப்பிட்ட பாடசாலை மலசலகூடங்களை அண்மித்த பகுதியினாலேயே இம்மாணவர்கள் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர் எனவும் இவர்கள் தீவிர புலன்விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் இம்மாணவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து போதைவஸ்துக்கள் அடங்கிய சிகரட்டுகள் பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Average Rating