கஜகஸ்தானில் சுரங்க விபத்தில் 41 பேர் பலி
Read Time:57 Second
கஜகஸ்தானில் இந்திய தொழில் அதிபர் லஷ்மி மிட்டலுக்கு சொந்தமான லெனின் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 32 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடத்து வருகிறது. பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் நிலக்கரி சுரங்கத்தின் வெளியே நின்று கதறி அழுதனர். அவர்களை சுரங்க அதிகாரிகள் ஆறுதல்படுத்தினார்கள். சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து பற்றி விசாரணை நடத்த லஷ்மிமிட்டல் உத்தரவிட்டுள்ளார். அவர் விரைவில் விபத்து நடந்த சுரங்கத்தை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.