வெடிவிபத்தில் லெப். கேணல் வீரமணி வீரச்சாவு
Read Time:40 Second
யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
லெப்.கேணல் வீரமணி என்றழைக்கப்படும் வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிற்றை சொந்த முகவரியாகவும், கிளிநொச்சி தொண்டமான் நகர், 156 ஆம் கட்டையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சுப்பிரமணியம் வடிவேலே வீரச்சாவடைந்தவர் ஆவார்.