தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் -ஜனாதிபதி
Read Time:1 Minute, 14 Second
புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரை உயிருடனோ அல்லது உயிரற்ற நிலையிலோ பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைவதற்காக அவருக்கு வழங்கிய காலக்கெடுவின் போது பிரபாகரன் உள்ளிட்ட பல புலிகளின் பொறுப்பாளர்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேவேளை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினத்தின்போது தற்காலிக யுத்தநிறுத்தம் பிரகடனப்படுத்தப் பட்டிருந்த சமயத்தில் இவர்களுக்கு சரணடைவதற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
One thought on “தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் -ஜனாதிபதி”
Leave a Reply
You must be logged in to post a comment.
இதை தானே எதிர்பாத்து மகிந்தவை ஜனாதிபதி ஆகினார்கள் புலிகள்…
புலிகளால் தான் இவ்வளவு மக்கள் சாவும்… புலிகளுக்கு இயலாவிட்டால் எங்காவது ஓடி போகவேண்டும்… மக்களின் மரணத்தை அதிகரிக்க கூடாது….
புலிகளை நம்ப கூடாது… அதுதான் தமிழரின் வரலாற்று பாடம்……
இந்த நாகரிக உலகில் இன்னும் அடக்குமுறை வன்முறை எண்டு கூறி தமது சுயநல வாழ்க்கை வாழ்ந்தார்கள் புலிகள்..அதை சில சுயநல புலம் பெயர் தமிழரும் ஆமோதித்தார்கள்….
இனியும் வேண்டாம்…..முடிவு வரட்டும்……பயங்கரவாதம் அழியட்டும்….