புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி அங்கத்தவர் கைது
Read Time:1 Minute, 18 Second
புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உதவியாளராக செயற்பட்டு வந்த பெண் புலி உறுப்பினர் ஒருவர் இன்றையதினம் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த சமயம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த யுவதியின் கணவரும் புலி உறுப்பினர் என்றும் அவர் யுத்தத்தின்போது உயிரிழந்துவிட்டதாக குறித்த யுவதி தெரிவித்துள்ளதாகவும் வெள்ளவத்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி வெளிநாடொன்றுக்கு செல்லும் நோக்கில் குறித்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளவத்தைப் பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating