நிதர்சனம்.கொம் (நோர்வே சேது) எங்கே??
நேற்றுஇரவு 08.06.06அன்றிரவு 10.00மணிக்கு ரி.பி.சி வானொலியில் அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றிருந்த வேளையில் லண்டனில் ஈழப்பதிஸ்வர ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பார்ட்டம் செய்த ராஜன் மற்றும் நோர்வேயில் இருந்து புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் சேது எனும் நடராஐh சேதுரூபன் உட்பட மூன்று புலிக்குண்டர்கள் ரி.பி.சி வானொலி நிலையத்தை தாக்கி அங்கு வானொலி நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவேகானநதன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே..
இதில் சாந்தன் எனும் புலிஉறுப்பினர் குடிபோதையில் தம்மையறியாமல் இவர்களுடன் வந்ததாகக் குறிப்பிட்டதால் விசாரணையின் பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாகவும் சேதுவும் ராஐனும் மேலதிக விசாரணைக்காக தொடர்ந்தும் லண்டன் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை புலிகளின் நிதர்சனம் இணையத்தளத்தை நடாத்தும் நோர்வேசேது எனும் நடராஐh சேதுரூபன் லண்டன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிதர்சனம்.கொம் இணையத்தளத்தின் செய்திகள் நேற்றிரவிலிருந்து ‘அப்டேட்” பண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி இணையத்தளத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் (தூசணவார்த்தைகளில்) எழுதி வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு பக்கதுணையாக புலிகளின் பொட்டம்மான் உட்பட வெளிநாடுகளில் உள்ள புலிப்பொறுப்பாளர்களும் இருந்து வந்தனர் இதுகுறித்து பலமுறை பலரும் நோர்வேசேதுவிடம் விசாரித்த போது தனக்கும் நிதர்சனத்திற்கும் எதுவித தொடர்புமில்லையென முழுப்பூசணிக்காயை ஒருபிடி சோற்றுக்குள் மறைக்க முயன்ற உத்தமர் தான் இந்த நோர்வேசேது.
நேற்றைய லண்டன் பொலிசாரின் விசாரணையின் போது நிதர்சனம் மட்டுமல்ல மற்றும் பல இணையத்தளங்களுடன் இவருக்குள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இவர் நோர்வே லண்டன் பகுதிகளில் மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கைகளின் பட்டியல் உட்பட பலதகவல்கள் லண்டன் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதேபோல் ராஐன் என்பவன் குறித்த பலதகவல்களும் லண்டன் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thanks…..WWW.ATHIRADY.COM