மன்;னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை
மன்னார் வங்காலை தோமஸ்புரி என்னும் இடத்தில் தந்தை, தாய், மகன், மகள் என நால்வர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. நேற்றிரவே இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்பகிறது. இவர்கள் நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இளம் தாய் தந்தையர் எட்டு வயது, ஆறு வயது சிறுவர் சிறுமியரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் தந்தையும், மகனும் து}க்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.
மூர்த்தி மார்ட்டீன்(35) அவரது மனைவி மேரி மார்ட்டீன்(27), மகள் அன் லுக்ஷியா(09), மகள் அன் நிலக்ஷன்(07) ஆகியோராவர். 2002 சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் இந்தியாவிலிருந்து திரும்பி தமது ஊரில் வாழ்ந்து வந்த குடும்பம் என அறியவருகிறது.
இதேவேளை வவுனியா வர்த்தகநிலையம் ஒன்றின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் மூன்று கடை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.