சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது..!
Read Time:1 Minute, 17 Second
சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சூதாட்ட மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும், மதத் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அமைச்சினால் சூதாட்ட மையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. நாட்டின் சமய, கலாச்சார மற்றும் சமூக விழுமியங்களுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நிபந்தனைகளின் அடிப்படையில் சூதாட்ட மையங்களை அமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என பௌத்த மத கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
Average Rating