சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார்.
Read Time:1 Minute, 19 Second
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார். நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை ஒஸ்லோ பயணமாகவுள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக புதிய அணுகுமுறை ஏற்டுத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும், அது தொடர்பாக மகிந்தவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நோர்வே பயணமாகும் மங்கள சமரவீர அது தொடர்பாக நோர்வே அரசாங்கத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் வெகுவிரைவில் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.