சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓஸ்லோ பயணம் மேற்கொள்கிறார். நோர்வே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை ஒஸ்லோ பயணமாகவுள்ளதாக சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார்....

மன்னார் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவு

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். வெள்ளாங்குளம் - துணுக்காய் வீதியில் இன்று சனிக்கிழமை காலை...

வவுனியா கிளைமோரில் நெக்கோட் ஊர்தி சிக்கியது

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவில் நெக்கோட் மாவட்ட துணைப்பணிப்பாளர் சென்ற ஊர்தி இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் ஊர்தி சேதமானது. ஊர்தியில் பயணித்தவர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை....

லண்டன் தமிழ் ஒலிரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) கலையகத்தை நாசப்படுத்திய புலியின் குண்டர்கள் மூவர் கைதின் போது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ன?? யார் இந்த நோர்வே சேது??

ரீ.பி.சி வானொலியின் செயலகத்தை உடைத்து நாசப்படுத்திய மூவர் லண்டன் பொலிஸாரினால் வியாழன்இரவு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ரீ.பி.சி வாடனொலியில் வழமையாக பிரதி வியாழக்கிழமைகள் தோறும் இடம்பெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி 08.06.06மாலை பிரித்தானிய...

ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு

ஆப்கானிஸ்தானின் தெற்குப்பகுதியில் கழுதை மீது வெடிகுண்டுகளை ஏற்றிவந்த தீவிரவாதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ""ஜபுல் நகருக்குள் வெடிகுண்டுகளை ஒரு தீவிரவாதி கொண்டு வருகிறார், போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கழுதை மீது அவற்றை...

உலக கோப்பை கால்பந்து: ஈக்வடார் அபார வெற்றி 2-0 கோல்கணக்கில் போலந்தை வீழ்த்தியது

eான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நேற்று கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில்...

தமிழக கவர்னர் பர்னாலா பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு

தமிழக கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அ.தி. மு.க. ஆட்சியில் கவர்னர் ராம மோகன்ராவ் கவர்னராக இருந்த போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய...

பொதுமக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.—ரிஎம்விபி தூயவன்.

பொதுமக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் து}யவன் விடுத்த அறிக்கை.யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அண்மைக் காலமாக பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளையும், படுகொலைகளையும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளாகிய...

இலங்கை அரசு_புலிகள் பேச்சு தோல்வி: சமரசத்திலிருந்து விலகுவது குறித்து நார்வே பரிசீலனை

ஆஸ்லோவில் நடப்பதாக இருந்த இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து சமரச நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது. (more…)

தான்சானியா நாட்டில் துயரம் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து 56 பேர் பலி

தான்சானியா நாட்டில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 56 பேர் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது. தான்சானியா நாட்டிலுள்ள மாலரெனி என்ற இடத்திலிருந்து அருசா என்ற இடத்துக்கு பஸ்...

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள்

சென்னையை சேர்ந்த கம்ப்ïட்டர் என்ஜினீயர் தம்பதிகளுக்கு கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. சோதனைக்குழாய் முறையில் கருத்தரித்து 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதுண்டு.ஆனால் இயற்கை முறையில் கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்...

ஐரோப்பாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து 25பேர் பலி

மத்திய தரைக் கடலில் உள்ள சிசிலி தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியானார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் இத்தாலி கடற்படை விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 12...

தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி: 4-2 கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 32 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது....

இலங்கை, புலிகளுக்கு நார்வே முக்கிய கேள்வி

அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். மேலும் தங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய நாடுகளை அமைதிக் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகுமாறும் புலிகள்...

் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல்: குடும்பஸ்தர் படுகாயம்

வவுனியா மாவட்டம் புதூர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் இன்று சனிக்கிழமை காலை 6.20 மணியளவில்...