காதலியை தாக்கிவிட்டு, கணவரை கயிற்றால் கட்டி ஆட்டோவில் கொண்டு சென்ற மனைவி!!
Read Time:1 Minute, 10 Second
தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து கணவரையும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணையும் கடுமையாகத் தாக்கிய மனைவி, கணவரை கயிற்றால் கட்டி முச்சக்கர ஆட்டோவில் கொண்டு சென்றுள்ளார்.
கணவரை கயிற்றால் கட்டி கடத்திச்சென்றவை மற்றும் அவருடன் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்தியது கம்பஹா, பெம்குள்ளவைச் சேர்ந்த பெண்ணாவார். இது தொடர்பான வழக்கில் குறித்த பெண்ணை 5ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதிக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் ஏ.எம்.என்.பீ. அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Average Rating