சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு
Read Time:40 Second
சீனாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்ஜோ மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதில் 400 வீடுகள் சேதமடைந்தன. 30 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவின் இதர மாகாணங்களிலும் கனமழை பெய்துவருகிறது. இதில் ஏராளமானோர் வீடிழந்தனர்