கள்ளக் காதலனை அசிட் வீசி கொலை செய்த பெண் கைது!
25 வயது திருமணமாகாத இளைஞனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் 30 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவர் தனது கள்ளக் காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள் ளார்.
அசிட் வீசுவதற்கு உடந்தையாக இருந்த கணவனையும் கணவனின் தந்தையையும் கைது செய்த வலப்பனை பொலிஸார் மூவரையும் வலப்பனை மாவட்ட நீதிபதி திருமதி குமாரி ஜயவர்தன முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
சம்பவத்தில் வலப்பனையை சேர்ந்தவரே கொல்லப்பட்டவராவார். இப்பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த காலஞ்சென்ற இளைஞர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருநாள் இப் பெண்ணின் வீட்டில் இவர்கள் இருந்தபோது கணவனிடம் சிக்கியுள்ளனர்.
கள்ளத் தொடர்பை கைவிடும்படி கண வன் மனைவியை கடுமையாக எச்சரித்துள்ளார். இருந்தும் இவர்கள் இருவருக்குமிடையிலான தொடர்பு நீடித்து வருவதை அறிந்து கொண்ட கணவன், மாவனல்லை பிரதேசத்திலிருந்து அசிட்டை வாங்கி வந்து மறைத்து வைத்துள்ளார். சம்பவ தினம் காதலன் மீது அசிட் வீசப்பட்டதை அடுத்து அவர் வலப்பனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்துள்ளார்.
அசிட் வீசியதாகக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவர் மற்றும் கணவனின் தந்தை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Average Rating