பொலிஸ் தம்பதி கொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் பலி
Read Time:44 Second
மாத்தறை கம்புறுபிட்டியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சிந்தக்க வசந்த என்பவரே நேற்று இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 16ம் திகதி கம்புறுபிட்டி பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating