கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
கிறிஸ்மஸ் தினமான நேற்று இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
சீதுவ பொலிஸ் பிரிவு, கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் 18ம் கட்டைப் பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டடை மீறி, வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது, அமுன்தொலுவ – சீதுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரும், மினுவான்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, கலகெதர பொலிஸ் பிரிவின் குருநாகல் – கண்டி வீதியில் கந்தேகுபுர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதியான கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating