அளவுக்கதிகமான குடியால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் பெண்: எச்சரிக்கைக்காக அதிர்ச்சிப் படங்களை வெளியிட்ட காதலன்
அளவுக்கதிமான மதுவினை அருந்தியதனால் 35ஆவது வயதில் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்டிலிலேயே முடங்கிவிட்ட பெண்ணொருவரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 25 கேன்களுக்கும் அதிகமான மதுபானங்களை அருந்திய 4 குழந்தைகளின் தாயான பெவெர்லி பிகொரெர் என்ற 35 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு படுத்த படுக்கையாகியுள்ளார்.
சுமார் 10 வருடங்களாக அளவுக்கதிமான குடிப்பழக்கத்துக்காளான பெவெர்லியன் தற்போதைய நிலைமைய பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.
நிச்சயிக்கப்பட்ட மரணத்தை எதிர்நோக்கியுள்ள பெவெர்லியின் பற்கள் வீழ்ந்து சிர்ஹொஸிஸ் எனும் நோயினால் ஈரல் முற்றாக பாதிப்படைந்து பேச முடியாமலும் அசைய முடியாமலும் இன்னுமொருவரின் பராமரிப்பில் கடந்த 8 மாதங்களாக உயிரை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பெவெர்லியை கவனித்துக் கொண்டிருக்கும் அவரது 6 வருட காதலரான அந்தொனி ஹொவார்ட் (31 வயது), பெவர்லியியை நிலைமைய படம்பிடித்து வெளியிட்டள்ளார்.
குடிப்பழக்கத்திலுள்ள ஏனையொருக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தவே நெங்சை உருக்கும் இப்புகைப்படங்களை அந்தொனி வெளியிட்டுள்ளார்.
Average Rating