குத்துப்பாடலை கைவிட்ட சஞ்சனா
ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?,
மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனியொருவன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். விஞ்ஞானி சயின்ஸ் பிக்ஷன் படம். மீரா ஜாஸ்மின் ஹீரோயின். நான் 2 வது கதாநாயகி.
இந்தப் படத்துக்காக சமீபத்தில் பாங்காக் போய் வந்தேன். தண்ணீருக்கு அடியில் எடுத்த காட்சி ஒன்றில் ரிஸ்க் எடுத்து நடித்தேன்.
குத்துப் பாடலில் ஆடுவது பற்றிக் கேட்கிறார்கள். முன்பு ஆடினேன். இரண்டு மூன்று படங்களில்தான் ஆடியிருப்பேன். ஆனாலும் எனக்கு அது பிடிக்கவில்லை.
கதாநாயகியாக ஆசை. குறைந்தபட்சம் இரண்டாவது கதாநாயகி வேடமாவது வேண்டும் என்பதால் அதை விட்டுவிட்டேன். இவ்வாறு சஞ்சனா சிங் கூறினார்.
Average Rating