சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கட்டுபெத்தவில் முற்றுகை.
Read Time:55 Second
சட்விரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டது. மொரட்டுவ கட்டுபெத்த அலங்கார என்ற கிராமத்தில் பிரமாண்டமான வீடொன்றை சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரே முற்றுகைக்கான பணிகளில் ஈடுபட்டனர். இந்த போலி வேலைவாய்ப்பு நிறுவனம் பிரபல தொலைக்காட்சி நாடகநடிகர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.