வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
Read Time:1 Minute, 5 Second
் வவுனியா மாவட்டம் வேப்பங்குளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகள் இருவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இத்துப்பாக்சி சூட்டினை நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே இவர்கள் உரியிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடாபான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.