கொழும்பிற்கு ஒருநாள் முழுதும் நீர்த்தடை!!
Read Time:1 Minute, 3 Second
கொழும்பில் சில பகுதிகளுக்கு நாளை (31) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மட்டக்குளி, மோதர, முத்துவெல்ல, மாதம்பிட்டி, மஹவத்த, கொட்டாஞ்சேனை, கிரேன்ட்பாஸ், புளுமென்டல் வீதி, ஜோர்.ஆர்.டி.சில்வா மாவத்தை மற்றும் அதனோடு தொடர்புடைய அனைத்து குறுக்கு வீதிப் பகுதிகளிலும் நீர்த்தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை இரவு 9 மணி தொடக்கம் மறுநாள் சனிக்கிழமை இரவு 9 மணிவரையும் 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Average Rating