தாயான நடிகை சினிமாவுக்கு முழுக்கு!!
Read Time:56 Second
தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை படங்களில் நடித்தவர் சமீராரெட்டி. இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீராரெட்டிக்கும் தொழில் அதிபர் அக்ஷய்வந்தேஷக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்த நிலையில் சமீரா ரெட்டி தற்போது கர்ப்பமடைந்து இருக்கிறார். இதனை அவரே தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சமீராரெட்டி கூறும் போது, நான் தாய்மை அடைந்து இருக்கிறேன். இது எனக்கு கடவுள் கொடுத்த வரம் ஆகும். இனிமேல் சினிமாவில் நடிக்கும் திட்டம் இல்லை என்றார்.
Average Rating