பணியில் இருக்கும்போது பார் பணிப்பெண்ணுடன் நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர்!!

Read Time:1 Minute, 54 Second

f22b3feb-ab67-49fe-8b03-8021f0353d9e_S_secvpfகாக்கி சீருடையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பார் பணிப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியுள்ளது.

குஜராத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சூரத் நகரின் டிண்டோலி என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோலங்கி பார்-பணிப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடினார். முதலில் அந்தப் பெண்ணின் மீது பணத்தை அள்ளி வீசிய அவர், பின் மேடையேறி அந்தப் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதை யாரோ தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போது வாட்ஸ்அப்பின் மூலம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி விஸ்வகர்ம பூஜைக்கு சென்ற இடத்தில்தான் இந்த நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார் சோலங்கி. இந்த வீடியோவைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஜே.எம்.பலோக், சப்-இன்ஸ்பெக்டர் சோலங்கி மீது விசாரணையைத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சூரத் நகர காவல்துறையினர் தங்கள் உயரதிகாரியிடம் முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூனியம் வைத்ததாக சந்தேகித்து 62 வயது மந்திரவாதி தலை துண்டித்து படுகொலை!!
Next post வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!!