திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மனபுதூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது70). இவருடைய மனைவி மீனா (60). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர். இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கவில்லை.
பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்த போது ராஜேந்திரன், மீனா இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதுபற்றி திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. சுஜாதா மற்றும் போலீசார் சம்ப இடத்துக்கு சென்றனர்.
ராஜேந்திரன் தலை உடலில் வெட்டு காயங்கள் இருந்தன. மீனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தலை குப்புற பிணமாக கிடந்தார்.
அவரது காதில் கிடந்த கம்மல்களை அறுத்து எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் அணிந்திருந்த தங்க செயின் வீட்டில் தரையில் கிடந்தது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகள் சேகரித்தனர். போலீசார் பிணங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating