கடனை திருப்பிக்கேட்ட அண்ணன், குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் கைது!!
திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(35), தொழிலாளி. இவர் தம்பி அதே ஊரை சேர்ந்தவர் கார்த்தி(28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுகுமாரிடம், கார்த்தி ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதுவரை திருப்பி தரவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சுகுமார், தனது மகன் லோகேசுடன் (1½) வயது வெளியே நின்றிருந்தபோது அவ்வழியாக வந்த கார்த்தியிடம், பணம் தரும்படி கேட்டார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்தத கார்த்தி அங்கிருந்த வெந்நீரை எடுத்து சுகுமார் மற்றும் குழந்தை லோகேஷ் மீது ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயடைந்த தந்தை, மகன் இருவரும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகுமார் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
Average Rating