நயனின் புதிய ரொமேன்ஸ்…!!

Read Time:1 Minute, 34 Second

nagarjunaஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரை அணுகியதாகவும், நயன்தாரா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிற ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சிக்கிம் மாநிலத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!
Next post தனது தற்கொலையை செல்ஃபி எடுத்த நடிகை!!