தவறான தொடர்பால் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது!!
ஒடிசா மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சுக்குள் 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
இங்குள்ள கோராபுட் மாவட்டத்தின் கண்டுல்பேடா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்த அந்த மாணவி பள்ளியை ஒட்டியுள்ள ஆஸ்டலில் தங்கியிருந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி அதன் பின்னர் பள்ளிக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு வயிறு கடுமையாக வலிப்பதாக அந்த சிறுமி கூறியதயடுத்து அவளது பெற்றோர் பொய்பாரிகுடா ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்சில் செல்லும் வழியில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நிமிடங்களுக்குள் அந்த குழந்தை இறந்துப் போனது.
தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த சிறுமி, பிறந்து-இறந்த தனது குழந்தையின் தந்தை என்று ஒருவரை கை காட்டியுள்ளதால் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating