மதுராந்தகம் அருகே பாக்கெட் சாராயம் விற்ற 9 பெண்கள் கைது!!
மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது, பெண்கள் வீடுகளில் எரிசாரத்தை பதுக்கி வைத்து, அதில் தண்ணீர் கலந்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதில் 150 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சாராயமும் சிக்கியது.
சாராயம் விற்பனை செய்ததாக அஞ்சலை (35), சுமைலா (35), இந்திரா (35), அம்முலு (38), குப்பு (35), சுகன்யா (24), அமலா (27), சங்கீதா (24) ஆகிய 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் அஞ்சலை வேலூரை சேர்ந்தவர். மற்ற பெண்கள் சூனாம்பேடு பகுதியில் உள்ளவர்கள். கைதான சங்கீதா தவிர மற்ற 8 பெண்களும் திருமணமானவர்கள். சாராயம் விற்றதாக கைதான 9 பெண்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Average Rating