ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!!
Read Time:1 Minute, 23 Second
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இந்த விடுதிக்குள் திடீரென்று புகுந்தது. இதனை பார்த்த மாணவிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் வாழுமுனி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். விடுதியில் சுவரின் ஓரத்தில் பதுங்கி இருந்த நல்லபாம்பை லாவகமாக மடக்கி பிடித்தார். பின்னர் அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். மாணவிகள் விடுதியில் நல்லபாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating