டெல்லியில் நேற்றிரவு காருக்குள் 25 வயது பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 பேரில் மூவர் கைது!!
டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஒரு காரில் கடத்திச் சென்ற 5 பேர், ராணுவ குடியிருப்பு பகுதியில் காரை நிறுத்தி அந்தப் பெண்ணை மாறி, மாறி கற்பழித்தனர்.
பின்னர், நள்ளிரவு வேளையில் தெற்கு டெல்லியில் உள்ள கான்பூர் பகுதியில் சாலையோரமாக மயங்கிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை மீட்ட போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தன்னை காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல் கற்பழித்து, சீரழித்து தப்பியோடி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சாலையோரமாக அனாதையாக நின்றிருந்த அந்தக் காரை கண்டுபிடித்த போலீசார், குற்றவாளிகளில் மூன்று பேரை இன்று கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல், டெல்லி ஜோதி நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி, பலாத்காரமாக கற்பழித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Average Rating