திருவண்ணாமலையில் அட்டைப்பெட்டியில் வைத்து குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை!!

Read Time:1 Minute, 36 Second

e1e7736d-bfc0-4198-9f36-15ce68dd5fb2_S_secvpfதிருவண்ணாமலை கரிகாலன் தெருவில் அந்தப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் நேற்று மாலை ஒரு அட்டைப்பெட்டி கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் குப்பையில் அட்டைப்பெட்டி கிடப்பதாக நினைத்து சென்றனர்.

ஆனால் சிறிதுநேரம் கழித்து அந்த அட்டைப் பெட்டிக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை கேட்டதும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது அட்டைபெட்டிக்குள் புத்தம் புதிய உடையணிந்த அழகான பெண் குழந்தை இருந்தது. குழந்தை பிறந்து 4 நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சமூகநலத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று குழந்தையை கைப்பற்றினர்.

பின்னர் கலெக்டர் ஞானசேகரன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாய்–மகளை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை!!
Next post வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!