ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை!!
ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கு மாறு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் கண்ணன், மகளி ரணி மனோரஞ்சிதம், ராஜா, வீரவேலவன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) இளங்கோவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு தலைக்கவசம் அணிந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தலைக்கவசம் அணிந்து செல்வது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். ரோடுகளில் உள்ள பள்ளங்கள் குழிகளில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்கனை ஓட்டி செல்வது சிரமம்.
எனவே ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்திட வேண்டும். அல்லது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஹெல்மெட் மாற்றி அமைத்திட வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்கள்.
இதேபோன்ற மனுவினை மாநிலம் முழுவதிலும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
Average Rating