வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!
மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அனுகூல் ஜாக் என்பவரே கைது நடவடிக்கைக்கு உள்ளானவர். கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அனுகூல் ஜாக் உறுதி அளித்துள்ளார். அதன்படி வேலை பெற தனது வீட்டிற்கு வருமாறு அனுகூல் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிச்சென்ற அப்பெண்ணை, அனுகூல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இவ்வி்வகாரத்தை அம்பலப்படுத்தாமல் இருக்க பணம் தருமாறு அனுகூல் மிரட்டியதாகவும், அப்பெண்ணின் கணவரிடம் இருந்து 1,54,000 ஆயிரம் பணம் பறித்ததாகவும் தெரிகிறது.
இந்நி்லையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அனுகூல் ஜாக்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 376, 406, 504, மற்றும் 506 ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating