இந்திக்க குணவர்த்தன காலமானார்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் இந்திக்க குணவர்த்தன காலமானார். இவர் மரணமடைந்த போது வயது 72. மேலும் இந்திக்க குணவர்த்தன தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மங்கள – மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு!!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....

கோட்டாபய, நாமல் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தை பெறவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

போதையில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

குடித்து விட்டு கடமையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சார்ஜன் களுத்துறை சந்தைக்கு அருகிலுள்ள பகுதியில் குடித்து விட்டு கடமை புரிவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய...

உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் கொள்ளையிட்டவர் கைது!!

யக்கலமுல்ல உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உதவிப் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபரின்...

கிழக்கிலங்கையில் கடல் அரிப்பு-அச்சத்தில் மக்கள்!!

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் ஓலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு காரணமாக மக்கள் தமது வளங்களையும் வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. அந்த பிரதேசத்தில் துறைமுகமொன்று அமைக்கப்பட்ட பின்னரே பெரிய அளவிலான இந்தக்...

ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது அமெரிக்கா!!!

ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையில் உள்ளடங்கும் முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியீடு தொடர்பில் ஆவலுடன் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க சார்பில்...

‘கூரிய கத்தியால் வயிற்றை வெட்டிக் கொள்வேன்’ – பந்துல!!

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவிடம் 50 கோடி நட்டஈடு கோரி சட்டக்கடதாசி ஒன்று அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனகுக்கு விருப்பு வாக்குகள்...

டெல்லியை சென்றடைந்தார் ரணில்: மோடி, முகர்ஜி, சுஸ்மாவுடன் சந்திப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார். இன்று மாலை டெல்லியைச் சென்றடைந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி...

இலங்கை தொடர்பான ஐ.நா யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு!!!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை...

கர்ப்பமானதாக கணவரை ஏமாற்றி நாடகம்: மருத்துவ பரிசோதனைக்கு பயந்து திருச்சி பெண் தப்பியோட்டம்!!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவரது மனைவி சங்கீதா (24). இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்ததாக கூறி கடந்த 3...

கோபி அருகே மகனின் அவசர காதல் திருமணத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60), விவசாயி. மனைவி பெயர் வெள்ளையம்மாள் (55) இவர்களது மகன் குணசேகரன் (32), தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்....

ரூ.15 லட்சம் மதிப்பில் பழனியில் கிரீன் டாய்லெட்!!

பழனியில் பக்தர்கள் வசதிக்காக யானைப் படிக்கட்டு உள்பட 4 இடங்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம்,...

அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை கொன்று ரத்தம் குடித்த கொடூரத் தந்தை கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகர் மாவட்டத்தில் செல்வம் கொழிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை சுத்தியலால் அடித்துக்கொன்று, அவளது ரத்தத்தையும் குடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில்...

திருமணமின்றி குழந்தைப் பெற்ற பெண்ணை மிரட்டி, அவளது குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விட்ட டாக்டர் கைது!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகரில் பிரசவத்துக்காக சென்றிருந்த பெண் திருமணமாகாமல் குழந்தை பெற்றெடுக்கிறார் எனத் தெரிந்துகொண்ட மருத்துவர் ஜித்தேந்திரா சவுத்ரி நம் சமூகம் உன்னையும், உன் குழந்தையையும் ஏற்காது என்று பயமுறுத்தி குழந்தையை அங்கேயே...

வேலியே பயிரை மேய்ந்தது: கோவிலில் சிலைகளை திருடிய பூசாரி உள்பட 6 பேர் கைது!!

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தெலுங்கானா மாநிலத்தில் கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரியே சிலைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரங்கல் மாவட்டம் பர்லபள்ளியில் புகழ்பெற்ற சென்னகேசவ சுவாமி கோவில் உள்ளது....

தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!

இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன. பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம்,...

டெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்!!

நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டு தூதரகத்தில் முதல்நிலை செயலாளராக பணியாற்றும் அதிகாரி செக்ஸ் கொடுமைப் படுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரியானா மாநிலம் குர்கானில்...

ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்: பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 12 பேர் கைது!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களிடம் மர்ம நபர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை...

உடுமலை பகுதியில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது!!

உடுமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் உடுமலை பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பழனியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு செல்லும் பஸ்சை...

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!!

பாலியல் பலாத்கார சம்பவங்களின் தாயகமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம்தேதி பி.கே.சிங் என்ற...

யானைத்தந்தம் கடத்திய நால்வருக்கு விளக்கமறியல்!!

அனுமதிப்பத்திரமின்றி யானைத்தந்தங்களை திருகோணமலைக்குச் கொண்டுசென்றதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து இரண்டு யானைத்தந்தங்களை கொண்டு வந்த வேளையில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் பாதிப்பு!!

நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் நேற்று மாலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் முனியப்பன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!!

தம்புல்லை - மொரகொல்லாவ பிரதேசத்தில் 3 வயதான சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாயுடன் வீட்டில் தனியாக இருந்த குறித்த சிறுமி, தாய்க்கு தென்படாமல் வீட்டில் இருந்து வெளியில் வந்த போத போது...

ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது கூட்டம் நாளை (14)ஆரம்பமாவுள்ளது. 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கூட்டத் தொடர் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!

பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்ஓயா தேசிய வனப்பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து...

ஜெனிவா செல்கின்றார் சிவாஜிலிங்கம்!!

யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச...

சிபா உடன்படிக்கை பொய்யானது – அரசாங்கம் மறுப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடுவதோ அல்லது அது சம்பந்தமான கலந்துரையாடலோ இடம்பெறமாட்டாது என் அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட இருப்பதாக...

மனைவிக்காக கணவன் உண்ணாவிரதம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற தனது மனைவியை டுபாயில் உள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அவதிப்படுத்துவதாக கூறி நபர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது இரு பிள்ளைகள் சகிதம் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவகுவ, ஹினுக்கல...

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது!!

´ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து...

நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இரவு தூங்கிய 5 வயதுடைய சிறுமியை காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில்...

பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!

மதுபோதையில் அநாகரிமான முறையில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் பகுதியில் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது...

தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!

30 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்க கட்டிகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரே...

ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம்...

துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!

கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 5.45 மணியளவில் இந்த...

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்!!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு...

கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் – 07பேர் வைத்தியசாலையில்!!

கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 07 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளனர். சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்று...

யாழில் பாரிய விபத்து – பலர் காயம்!!

இன்று காலை பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற தனியார் மினிபஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து எற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா...