பதுளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள 168 எயிட்ஸ் நோயாளர்கள்..!!
பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 168 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக எயிட்ஸ் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் இயக்குநர் டாக்டர்.சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்படி எயிட்ஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவியர் அறுவர் அடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் டாக்டர்.சிசிர லியனகே மேலும் கூறுகையில்,
பெருந்தோட்டப் பிரதேசங்களில் எயிட்ஸ் தொற்று பரவி வரும் அபாயம் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கணிப்பீட்டின் அடிப்படையில் இதுவரையில் 168 பேர் பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் யுவதிகள் என்பதும் அறுவர் பாடசாலை மாணவியர் என்பதும் தெரியவந்துள்ளது.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் வாழும்மக்கள் இவ்விடயத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவியரின் நடவடிக்கைகளில் பெற்றோரும் ஆசிரியர் சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டு மெனவும் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
Average Rating