உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்..!!
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரங்களுக்குள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதரப் சாதாரண தரப்பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள் ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் இவ்வாண்டு நடைபெற்று முடிந்த 2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த னர்.
இவ்வாறான நிலையில் இப்பரீட்சைக்கான பெறுபேறுகள் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.
இம் முறை உயர்தரப் பரீட்சைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப பிரிவு உள்ளடங்களாக ஆறு பிரிவுகளின் அடிப்படையில் இம்முறை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன.
தொழில்நுட்ப பிரிவின் கீழ் சுமார் 14000 மாணவ, மாணவியர் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததோடு இவர்களில் இரண்டாயிரம் பேர் தொழில்நுட்பத்துறை பட்டக் கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழங்களில் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதனிடையே நேற்றுமுன்தினம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்த கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விடைதாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள் ளன.
இந்நடவடிக்கையானது இம்முறை இர ண்டு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளது. வினாத்தாள் திருத்தப்பணிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்.
இம்முறை பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் 55 நகரங்களை சேர்ந்த 87 பாடசாலைகளின் 108 மதிப்பீட்டு நிலையங்களில் இடம் பெறவுள்ளதாக அவ்வறிக்கையில் மே லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating