இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 5 வாலிபர்கள்: நண்பர்களாக பழகி நயவஞ்சகம்…!!
விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பட்டினத்தை சேர்ந்தவர் மோனிஷா (பெயர் மாற்றம்). 14 வயதான மோனிஷா மதுரவாடாவை சேர்ந்த ஹேமந்த், பாலகிருஷ்ணா, ராஜேஷ்குமார் ஆகியோரிடம் நண்பர்களாக பழகி வந்தார்.
இவர்கள் மூலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த தாமோதர ஜீவரத்தினம், சிவக்குமார், ஆகியோர் அறிமுகமானார்கள்.
இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி மோனிஷா மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கோபால பட்டினம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு மோனிஷா வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டும் இருந்தார்.
அவர் கூறும்போது, ‘‘நண்பர்களாக பழகிய 5 வாலிபர்களும் தன்னை ஆசை வார்த்தை கூறி காரில் கடத்தி சென்று மதுரவாடாவில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து 2 நாளாக 5 பேரும் மாறி மாறி கற்பழித்தனர் என்றார்.
இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். கோபால பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான வாலிபர்கள் ஹேமந்த், பாலகிருஷ்ணா, ராஜேஷ்குமார், தாமோதர ஜீவரத்தினம், சிவக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மோனிஷா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Average Rating