பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை: வேடிக்கை பார்த்த பொலிசார்…!!

Read Time:2 Minute, 28 Second

sfdfdபெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தியதை கண்டித்து பிரபல நடிகை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Cologne நகரில் புத்தாண்டு அன்று கூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம் ஒரு கும்பல் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பொலிசார் சிலரை கைது செய்துள்ளதுடன் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Milo Moire(32) என்ற நடிகை நேற்று காலை Cologne நகரின் மையத்தில் முழு நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

’பெண்கள் பொது இடங்களில் சுதந்திரமாக செல்ல வேண்டும். கடந்த 50 வருடங்களாக இருந்த சுதந்திரம் தற்போது கேள்வி குறியாக மாறியுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை நசுக்கும் விதத்தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என விளம்பர பதாகையை ஏந்தியவாறு அவர் போராட்டித்தில் ஈடுப்பட்டார்.

நிர்வாணமாக எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘பெண்கள் ஒரு போதும் உடலுறவுக்காக மட்டும் படைக்கப்படவில்லை.

சமுதாயத்தில் பிறர் எவ்வாறு மதிக்கப்படுகிறார்களோ, அதே போல் பெண்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே நிர்வாணமாக போராடியதாக அந்த அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் நடிகை நிர்வாணமாக நடத்திய இந்த போராட்டத்தை கண்டிக்காமலும், தடுக்காமலும் அங்குள்ள பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரைக் கொன்ற மனைவி கைது…!!
Next post மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..!!