கணவரைக் கொன்ற மனைவி கைது…!!
Read Time:57 Second
அக்போபுர – கிதுல்உகுவ பிரதேசத்தில் கணவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து முரண்பாடு வலுவடைந்தமையால் இவர் கழுத்தை நெறித்து தனது கணவரைக் கொலை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் 43 வயதான ஆணொருவரே பலியாகியுள்ளார். சந்தேகநபரான மனைவி 33 வயதான ஒருவராவார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating