மாணவியை பாலியலில் ஈடுபடுத்திய புகார்: போலீஸ் ஏட்டு–பெண்கள் உள்பட 12 பேர் கைது…!!

Read Time:1 Minute, 51 Second

472788b0-ab4c-4299-b32f-33cd4d0c290c_S_secvpfமதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுரையில் 9–ம் வகுப்பு மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரி, கலைமணி, தனலட்சுமி, மாதவி மற்றும் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

இதில் மதுரை திடீர்நகர், திருப்பரங்குன்றம் பகுதி லாட்ஜில் வைத்து 9–ம் வகுப்பு மாணவி ஒருவரை சிலர் கடந்த 2 ஆண்டுகளாக விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவி பகலில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவியை மீட்டதோடு லாட்ஜ் உரிமையாளர்கள் தங்கபாண்டியன், சுந்தர பாண்டியன் மற்றும் ஷகிலாபானு, செல்வி, மீனாட்சி ஆகியோரையும், போலீஸ் ஏட்டு, அரசு பஸ் டிரைவர் என 12 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வறுமை காரணமாக மாணவி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அவரது தாய்க்கு தெரிந்தே நடந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயுடன் போராடிவந்த பிரபல பாப் பாடகர் டேவிட் போவி மரணம்…!!
Next post “போக்கற்ற நிலையிலா” கருணா அம்மான்? கருணாவின் நிலையென்ன? “தமிழ் மக்கள் பேரவை”யின் முடிவென்ன?? -எஸ்.எம்.எம்.பஷீர்…!!