கேமரூன் நாட்டு மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி…!!
Read Time:1 Minute, 9 Second
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள டோவாலா நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்து பேர் பலியாகினர்.
இங்குள்ள ஒரு மசூதிக்குள் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி நுழைந்த தீவிரவாதி வெடித்து சிதறியதில் அங்கிருந்த பத்து பேர் பலியாகினர். நைஜீரியாவில் வன்முறை வெறியாட்டங்களின் மூலம் அட்டூழியத்தில் ஈடுபட்டுவரும் போக்கோஹரம் தீவிரவாதிகள் அருகாமையில் உள்ள கேமரூன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தற்கொலைப்படை தாக்குதல்களில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்டு வருவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating