விருகம்பாக்கம் தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மர்மம் நீடிப்பு..!!
விருகம்பாக்கம், குமரன் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படையில் செல்போன் டவர், மின் கோபுர டவர் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஆறுமுகம் அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் லேசான வெட்டு விழுந்தது. உடனே மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த வெங்கடேஸ்வரலு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உதவி கமிஷனர் சுப்பராயன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொலைக்கான காரணம் என்ன? என்று இதுவரை தெரியவில்லை. மர்மம் நீடித்து வருகிறது.
தொழில் போட்டியில் வெங்கடேஸ்வரலு, தீர்த்து கட்டப்பட்டாரா? அல்லது வேலை பார்த்த இடத்தில் யாருடனும் மோதல் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating