யாசகம் வழங்க மறுத்ததால் பிளாஸ்டிக் கடைக்கு தீ வைத்த நபர் அநுராதபுரத்தில் கைது…!!
யாசகம் கொடுப்பதற்கு வர்த்தகர் ஒருவர் மறுத்ததால் ஆத்திர முற்ற இளைஞரான யாசகர், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை தீயிட்டமை தொடர்பில் அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அநுராதபுர பிரதேசத்திலுள்ள வர்ததக நிலையம் ஒன்றில் யாசகம் கேட்டு வந்த இந்த இளைஞருக்கு கொடுக்க மறுத்த போது அந்த நபர் கடையிலிருந்த இளைஞருக்கு நிர்வாணத்தைக் காண்பித்துள்ளார். இதையடுத்து கடையிலிருந்த இளைஞர் அந்த நபரை தாக்கி விரட்டியடித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் கடையிலுள்ள ஊழியர்களுடன் சண்டையிட்ட இளைஞர் பிளாஸ்டிக் கடைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தை தீ பரவியபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கூடாரம் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்துள்ளனர்.
பிளாஸ்டிக்கடை உரிமையாளர் இச்சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராவை பரிசீலித்த போது யாசகம்கேட்டு வந்த இளைஞன் தீயிட்டு தப்பிச் செல்வது பதிவாகியிருந்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் சில நாட்கள் தேடுதல் நடத்தியும் அந்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.
நேற்று முன்தினம் காலை இந்த நபர் அநுராதபுரம் புதிய நகர பஸ் நிலையத்தில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கைது செய்யப்படும்போது இவரிடம் முதல்நாள் யாசகம் மூலம் வருமானமாகக் கிடைத்த 3000 ரூபா இருந்துள்ளது.
Average Rating