உலக சாதனைக்காக 1008 முறை தலையால் சுவரில் முட்டிய விவசாயி…!!
அம்பை அருகே உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பலவேசம் (வயது54). விவசாயியான இவருக்கு உலக சாதனை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
இதற்காக அவர் தலையால் சுவரில் முட்டியும், வெறும் கைகலால் சுவரில் குத்தியும் பயிற்சி எடுத்தார். தொடர் பயிற்சியின் காரணமாக 5 நிமிடத்திற்குள் 1008 முறை சுவரில் முட்டுவது, ஒரு நிமிடத்தில் 702 முறை வெறும் கைகளால் சுவரில் குத்துவது என அவரது திறன் வளர்ந்தது.
இதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அவர் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பை சேர்ந்த ராஜேந்திரன் முன்னிலையில் தலையால் முட்டியும், கைகளால் குத்தியும் தனது சாதனையை நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று செய்து காட்டினார்.
சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன், தபோ மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி டேவிட் பிள்ளை ஆகியோர் முன்னிலையில் பலவேசம் செய்து காட்டிய இந்த சாதனையை அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பை சேர்ந்த ராஜேந்திரன் வீடியோவில் பதிவு செய்தார்.
இந்த பதிவை ஆய்வு செய்து இன்னும் ஒருவாரத்தில் முடிவை அறிவிக்க உள்ளதாக அவர் கூறினார். இதற்கு முன்னர் கையில் உறை அணிந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் ஒரு நிமிடத்தில் 805 முறை சுவரில் குத்தியது உலக சாதனையாக உள்ளது. ஆனால் தலையால் சுவரில் முட்டி யாரும் இதுவரை சாதனை செய்யவில்லை. விவசாயியின் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி னர். * * * உலக சாதனைக்காக சுவரில் தலையால் முட்டும் விவசாயி பலவேசம்.
Average Rating