8 ஆண்டுகளான கருமுட்டையால் குழந்தை பெற்ற உலக அழகி..!!

Read Time:2 Minute, 12 Second

dina-500x500இந்திய முன்னாள் அழகி டயானா ஹைடன் (42). இவர் கடந்த 1992–ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்று பின்னர் உலக அழகி ஆனார்.

அதன் பின்னர் அவர் மிகவும் ‘பிசி’ ஆனதால் திருமணத்தை தள்ளி வைத்தார். எனவே, குழந்தை பெற வசதியாக கடந்த 2007–ம் ஆண்டில் 32–வது வயதில் தனது கரு முட்டைகளை சேகரித்து மும்பையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உறைந்த நிலையில் வைத்திருந்தார். மொத்தம் 16 கரு முட்டைகளை இவ்வாறு வைத்து பாதுகாத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தனது 40–வது வயதில் அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த கொலின்டிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகுதான் இவருக்கு என்டோ மெட்டிராசிஸ் என்ற நோய் இருந்தது தெரிய வந்தது.

இந்த நோய் பாதித்தவர்களின் கருப்பையில் இருந்து முதிர்ச்சியுற்ற தரமான முட்டைகளை உருவாக்க முடியாது. அதன் மூலம் குழந்தை பேறுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, அவர் தான் ஏற்கனவே 8 ஆண்டுகளாக உறைய வைத்திருந்த கரு முட்டைகளை செயற்கை முறையில் குழந்தை பெற பயன்படுத்தினார்.

இதில் மும்பையை சேர்ந்த கருவியல் டாக்டர்கள் யால்சேட்கர் மற்றும் கிரிசிகேஷ் பாய் உள்ளிட்டோர் முயற்சியின் மூலம் டயானா ஹைடன் கர்ப்பம் ஆனார்.

அதை தொடர்ந்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆர்யா ஹைடன் என பெயர் சூட்டியுள்ளார். குழந்தை 3.7 கிலோ எடையுடனும், 55 செ.மீட்டர் நீளமாகவும் ஆரோக்கியத்துடன் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் நடைபெறும் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஹியூகோ ஸ்வயர் கலந்துகொள்கிறார்..!!
Next post கொழும்பிற்கு 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்…!!