யாழில் நடைபெறும் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஹியூகோ ஸ்வயர் கலந்துகொள்கிறார்..!!

Read Time:1 Minute, 57 Second

926719872Hugoஉத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியாவின் வௌிவிவகாரா இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

இன்றுகாலை 8.10 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

அவர் எதிர்வரும் 16ம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இதுதவிர வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் ஹியூகோ ஸ்வயர் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்து கொள்ளவுள்ள ஹியூகோ ஸ்வயர், அதன்போது வடமாகாண முதலமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

காலியில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹியூகோ ஸ்வயர் இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக சாதனைக்காக 1008 முறை தலையால் சுவரில் முட்டிய விவசாயி…!!
Next post 8 ஆண்டுகளான கருமுட்டையால் குழந்தை பெற்ற உலக அழகி..!!