வருடத்தின் முதல் 15 நாட்களில் 1912 பேருக்கு டெங்குக் காய்ச்சல்: கொழும்பில் அதிகளவானோர் பாதிப்பு..!!
Read Time:1 Minute, 11 Second
வருடத்தின் முதல் 15 நாட்களில் 1912 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே ஆகக்கூடியதாக 627 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 263 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 133 பேரும், கண்டி மாவட்டத்தில் 109 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து துப்புரவு செய்வதன் மூலம் நுளம்புப் பெருக்கத்தைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.
Average Rating