இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை…!!
Read Time:48 Second
இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்: தலவாக்கலையில் அமைதியின்மை.
தலவாக்கலை நகரில் நேற்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.
பொலிஸார், இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தார்.
நிலைமை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Average Rating