கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு…!!
Read Time:1 Minute, 12 Second
கிணற்றில் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் சாவு வவுனியா பூவரசங்குளம் கந்தன் குளம் கிராமத்தில் நேற்று மாலை வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு சொந்தமான பொது கிணற்றில் வயோதிபப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வள்ளிபுரம் தனலட்சுமி (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச சபையால் கட்டி கொடுக்கப்பட்ட இக்கிணரானது சரியான முறையில் பாதுகாப்பானதாக அமைக்கப்படவில்லையென்றும் அரைகுறையாக கட்டப்பட்டுள்ளதால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
குறித்த கிணறானது சரியாக புனரமைப்பு செய்யாவிடத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கிராம மக்கள் கருத்து வெளியிட்டனர்.
Average Rating