குருநாகலில் கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொலை..!!
Read Time:51 Second
குருநாகல் யட்டிவெஹரவத்த பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொருவருடன் நிலவிய வாக்குவாதம் வலுவடைந்ததால் நேற்றிரவு 11 மணியளவில் இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரதேச தோட்டப் பகுதியைச் சேர்ந்த 43 வயதான காவலாளி ஒருவரே கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Average Rating